செப்டம்பர் 9th, 2006- ‍க்கானத் தொகுப்பு

வைகோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.

செப்டம்பர் 9, 2006

கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: காலப்போக்கில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.
கேள்வி: இடையில் இந்தியா தீர்வுத்திட்டம் ஒன்று கொடுத்ததாக வெளியான தகவல்; குறித்து?
பதில்: இறுதியில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தத்தீர்வு அமையும் என நினைக்கிறோம். அப்படி இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதைத் தவிர இவ்விடயம் குறித்து விசேடமாக மேற்கொண்டு கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி: தமிழக முதல்வர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் உட்பட மற்றைய தமிழகத் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா?

பதில்: இரண்டொரு நாட்களில் தமிழகத் தலைவர்கள் அனைவரையும் சந்திப்போம். அதேநேரம் முதல்வரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க சம்பந்தன் மறுத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் தாம் இரண்டொரு நாட்களில் சந்திப்பு பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராவுக்கு வைகோ கண்டனம்

இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடக்கலாம்.

சிங்கள அரசின் இனவெறியும் தமிழர்களுக்கு எதிரான அராஜக மனப்பான்மையும் சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் வாக்குமூலத்தில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தனது இராஜிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயற்பட்டுள்ளார். அதற்காக அவரைக் குறை கூறிய விதம் கண்டனத்துக்குரிய என்றார்.
வைகோவுடனான சந்திப்பில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி சந்திப்பது என்றும் அதைத் தொடர்ந்து அன்று மாலையோ அல்லது 9 ஆம் திகதி காலையிலோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அத்திட்டத்தின் படி தமிழக முதல்வரைச் சந்திக்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
தமிழக முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாறுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வைகோ மூலமாக பிரதமரைச் சந்திக்கும் அவர்களது திட்டம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் அதிருப்தி அடைந்ததாகவம் இதன் விளைவாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தள்ளிப்போட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மதியம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ பிரதமரின் தனிச்செயலாளருடன் பேசி இச்சந்திப்புக்கு அனுமதி பெற்றுவிட்டதாகவும் 8 ஆம் திகதி மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் மாகராஸ்டிரா குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கியூபா பயணம் குறித்த கடைசி நிமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பிரதமருடனான சந்திப்பு கைகழுவப்பட்டதாககத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் தாம் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழக முதல்வரைச் சந்திப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
தமிழகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தேசிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆதாரம்: வீரகேசரி.

திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.

செப்டம்பர் 9, 2006

படையினர் 1200 பேருடன் திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து லங்கா முடித எனும் பெயருடைய கப்பல் ஒன்று 1200 படையினரை ஏற்றிக் கொண்டு 6 டோராக்கள் பாதுகாப்பு வழங்க சர்வதேச கடல் வழியாக திருமலை நோக்கி செல்கிறது.

படையினரிற்கு பாதுகாப்பாக 600 தமிழ் மக்கள் மனிதக் கேடயங்களாக கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத் தமிழ் மக்கள் அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து தென்இலங்கைக்கு செல்லவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

இந்தியா, சிறிலங்கா அரசியலில் தலையிடக்கூடாது: அனுரா

செப்டம்பர் 9, 2006

சிறிலங்கா அரசியலில் இந்திய தூதுவர் நிருபமா ராவ் தலையிடுவதை சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகால சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:
இனப்பிரச்சனைக்கு அரசியல் வழித்தீர்வுதான் காணப்பட வேண்டும். இராணுவ நடவடிக்கை தேவையில்லை.
இப்போது புலியை காயப்படுத்திருயிருக்கிறீர்கள். புலியை காயப்படுத்தினால் அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது திருப்பித் தாக்கும்.
7 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் சரவதேச தலைவர்கள் பட்டியலில் 32 ஆம் இடத்திலிருந்து 63 ஆம் இடத்துக்கு ஜோர்ஜ் புஸ் தள்ளப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு யூலை மாதத்தில் ரொனி பிளேயர் பொறுப்பிலிருந்து விலக உள்ளார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் அவர்களது மதிப்பு குறைந்துவிட்டன.
இனப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும் ஒரு முக்கியமான அங்கம். 1938 ஆம் ஆண்டே கூட்டரசு முறையை பண்டாரநாயக்க வலியுறுத்தினார். கூட்டரசு முறையை வலியுறுத்திய முதல் சிங்களர் அவர்.
சம்பூரை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் அதனை தக்கவைக்கும் திறமையோடு இருக்க வேண்டும்.
ஒரு நாட்டை பிடிப்பது எளிது. அதனைத் தக்கவைப்பது கடினம் என்பார் நெப்போலியன்.
பாகிஸ்தானிய முன்னாள் தூதுவர் பசீர் வாலி மொகமெட் தன் மீதான தாக்குதலுக்கு இந்திய றோவை குற்றம்சாட்டியுள்ளார். எதுவித ஆதாரமுமில்லாமல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியலில் இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தேவையில்லாமல் தலையிடுகிறார். எமது நாட்டை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் தூதரகப் பணியை பார்க்கவும்.
இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் முன்னைய இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிட் நடவடிக்கையால் ராஜீவ் காந்தியை விலை கொடுக்க நேரிட்டது.
சிறிலங்கா அரசாங்கம் யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை இந்தியத் தூதுவர் கூறக்கூடாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட மகிந்த ராஜபக்ச ஏற்கனவே முடிவு செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவும் புத்திசாலித்தனமாக இந்த நட்புறவை அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார் அனுரா பண்டாரநாயக்க.
நன்றி>புதினம்.