ஆகஸ்ட் 18th, 2006- ‍க்கானத் தொகுப்பு

சிங்களத்திற்காக பாடுபடும் பிபிசி தமிழ்சேவை.

ஆகஸ்ட் 18, 2006

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மறுப்பறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஊகங்களின் அடிப்படையில் திரித்து கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தின் சார்பில் தமிழ் நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒருபக்க அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டசபை தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடுதலை புலிகளால் அநாதை காப்பகம் என்று கூறப்பட்டுள்ள இடம் உண்மையில் இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஆட்களை சேர்த்து பயிற்சி அளிக்கும் விடுதலைப் புலிகளின் முகாம் என்றும், இவற்றைப்பற்றிய ஒளிநாடா இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர சமூகத்துடனும் பத்திரிகையாளர்களுடனும் ஆகஸ்ட்
16 ஆம் தேதி பகிர்ந்துகொண்டும் வெளியிடப்பட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் குறைந்த வயதுடைய போராளிகளை பலவந்த ஆட்சேகரிப்பு மூலம் பயிற்சியளிப்பது பலகாலமாக நடைபெறுவதாகவும், அந்த அடிப்படையில் இராணுவ விமான தாக்குதலின்போது விடுதலைப்புலிகளால் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களும் இருந்திருக்கலாம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு இழப்பு உட்பட இச்சண்டையின் மூலம் ஏற்பட்டுள்ள சகல மனித இழப்புகளுக்கும் இலங்கை அரசு தனது முழுமையான கவலையை தெரிவிப்பதாகவும், விடுதலைப்புலிகளின் உந்துதலினால்தான் அரசாங்கம்

தற்காப்புக்காகவே ஒரு வகை நிர்ப்பந்தத்தினால் நடத்திய தாக்குதலில் தான் இந்த மனித இழப்பு நேர்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவும் இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தமது கொடூர செயல்களால் ஏற்படும் மனித துயரங்களை தமக்கு சாதகமாக விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் விடுதலைப்புலிகள் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை என்றும் இலங்கை அரசின் அறிக்கை கூறுகிறது.
நன்றி>பிபிசி
http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர் விபரம்.

ஆகஸ்ட் 18, 2006

Sencholai air-strike killed 55, details released

Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
On Thursday, Mullaithivu Principals Association and Kandavalai Principals Association, the organisors of the ten-day program, condemned the aerial bombardment that killed 55 schoolchildren and staffers.

“The residential course progressed to its fourth day, when on 14 August at 7:00 a.m the students were getting ready for the day’s program when four Sri Lankan government Kfir jets started showering the area with bombs,” the organisors said in a joint press release.

The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)

Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:

School: Puthukkudiyiruppu Mahavidhyalayam

Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT

School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu

School: Udayarkaddu Mahavidhyalayam

Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam

School: Mullaitivu Mahavidhyalayam

Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil

School: Kumulamunai Mahavidhyalayam

Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai

School: Vidhyananda College, Mulliyavalai

Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai

School: Chemmalai Mahavidhyalayam

Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai

School: Oddusuddan Mahavidhyalayam

Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.

School: Muruhananda Mahavidhyalayam

Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai

School: Tharmapuram Mahavidhyalayam

Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram

School: Piramanthanaru Mahavidhyalayam

Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai

Names of staff killed

Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
S Jeyarubi (Age 20)

Reproduction of this news item is allowed when used without
any alterations to the contents and the source, TamilNet, is mentioned

நன்றி>தமிழ்நெற்

யாழில் பட்டினிச்சாவு அவலம்: 5 இலட்சம் தமிழர்கள்.

ஆகஸ்ட் 18, 2006

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலால் தமிழ் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனிதக்கேடயங்களாக குடியிருப்புக்களுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் ஐந்து லட்சம் குடாநாட்டு மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
களமுனை தகவல்கள் ஒரு வித மர்மம் நிறைந்த பீதியை கிளப்பிக்கொண்டிருக்க மறுமுனையில் ஊரடங்கு உத்தரவு நேரங்களில் நடைபெறும் அப்பாவி பொதுமக்களின் படுகொலைகள் இரத்தத்தை உறைய வைக்க- இன்னொரு புறம் அங்கு பட்டினி நிலை தலைதூக்கலாம் என்ற அபாய அறிவிப்பானது அசரீரியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தற்போது நான்கு மணித்தியாலங்கள் வரை தளர்த்தப்பட்டது.
வலிகாமம், தீவகம் பகுதிகளில் முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரையிலும்
வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரையிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் வீதிக்கு வந்த பொதுமக்கள் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்;களை வாங்கிகொண்டு மீண்டும் தமது வீடுகளை நோக்கி விரைகின்றனர் மக்கள். அந்த மூன்று மணித்தியாலங்களில் பிரதான வீதிகளில் பயங்கர மக்கள் நெருக்கடி.
அச்சமயம் அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வெளியில் வரும் மக்கள் அவதானிக்கப்படுகின்றனர். சிறையில் கண்காணிக்கப்படுவது போல் நடத்தப்படுகின்றனர்.
ஊரடங்குச் சட்டத்தால் குடாநாட்டில் சகல தொழில் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாகக் கிராமப் புறங்களில் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளர்கள் சுமார் ஒரு வாரமாகத் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரையோரங்களை அண்டி வாழும் கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்வதில்லை. அவர்களது குடும்பங்களும் பெரிதும் துன்பங்களை அனுபவிக்கின்றன.
குடாநாட்டின் பல இடங்களிலும் விவசாயப் பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அமுலில் இருப்பதால் விவசாயிகள் எவரும் தமது வயல்களுக்கு செல்ல வாய்ப்புக் குறைந்துள்ளது. நீர் பாய்ச்சவும் எவருமில்லை. மரக்கறிப் பயிர்கள் என்பன நீரின்றிக் கருகி வருகின்றன.

தோட்டங்கள் எங்கும் பயிர்கள் வாடிப் போய்க் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளுக்கே மரக்கறி வகைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துகளும் முற்றாகத் தடைப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக் கூட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
இது இவ்வாறிருக்க பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளிலும் விசமிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பதுக்கல்- அபரிமிதமான விலை உயர்வு என்பவற்றைத் தவிர்த்து உணவுப்பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யுமாறு யாழ். அரச அதிபர் க.கணேஸ் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரியுள்ளார்.
இது விடயமாக பல.நோ.கூ.சங்கங்கள் மற்றும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் யாழ். அரச அதிபர் க.கணேஸ் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குடாநாட்டிலுள்ள பிரதேச செயலர்கள், உதவி அரச அதிபர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இது தொடர்பாக அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னின்று உழைக்கவேண்டும் என்றும் கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை சீரான முறையிலும், நீதியான விலையிலும் விற்பனை செய்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் ப.நோ.கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துக்குப் பொறுப்பான அனைவரும் தமது விற்பனை நிலையங்களை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் இயங்குவதனை உறுதிப்படுத்துமாறும அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குடாநாட்டில் வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருட்களே கைவசம் உள்ளதாக என்று யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
யாழ். அரச அதிபர் கே.கணேஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம், நல்லூர், அனலைதீவு ப.நோ.கூ.சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் “கொழும்பில் இருந்து பொருட்;கள் ஏற்றிவந்த 60 லொறிகள் முகமாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன” என்றும் “அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவர ஏற்பாடு செய்யும்”;படியும் கோரிக்கை விடுத்தனர்.
அரிசி, மா, சீனி ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதுடன் குடாநாட்டுக்கான மின்சாரம் தொடர்ந்து தடைப்பட்டுள்ள இந்நிலையில் எரிபொருட்களும் தற்போது முற்றாக தீர்ந்து வருவதாக களஞ்சிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேங்காய் ஒன்றின் விலை 50 ருபாவிலிருந்து 250 ருபாவுக்கு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாய் 50 ருபாவுக்கு விற்கப்படுகிறது.
குடாநாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் கிட்டத்தட்ட முற்றாகவே செயலிழந்த நிலையாகவே காணப்படுகிறது.
செல்லிடப்பேசி மற்றும் வயர்லெஸ் தொலைபேசி சேவைகள் முற்றாக செயலிழந்துள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறிலங்கா ரெலிக்கொம் தனது சேவையை வழங்கி வருகிறது.
இதனால் வீடுகளில் தொலைபேசி வசதி உடையவர்கள் சிலர் இதனையே சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெளிவான அழைப்புக்களை வெளி இடங்களுக்கு மேற்கொள்ளக்கூடிய தொலைபேசி வசதி கொண்டவர்கள் வெளி அழைப்புக்களுக்கு 10 ருபாவும் உள்வரும் அழைப்புக்களுக்கு 8 ருபாவும் அறவிட்டு தமது “இடைக்கால தொழிலாக” அதை “செழிப்புறச்செய்வதில்” தீவிரமாக உள்ளனர் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, யாழ். மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதற்கான வசதிகள் தற்போது இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் க.கணேஸ் அறிவித்துள்ளார்.
முகமாலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தொடங்கிய மோதலோடு வடக்கிற்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதால், ஏற்கனவே தமது தேவைகளுக்காக வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் இடர்படுகின்றனர்.
குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும், அங்கிருந்து வவுனியா, கொழும்பு போன்ற இடங்களுக்கும் தொழில் நிமித்தமாகவும், மருத்துவத் தேவைகள் மற்றும் வேறு விடயங்களுக்காகவும் சென்றவர்கள் திடீரெனப் பாதைகள் பூட்டப்பட்டதால் தத்தமது பகுதிகளுக்குத் திரும்ப முடியாமல் அங்கலாய்க்கின்றனர்.
தமது கைக்குழந்தைகளைத் தனியாக விட்டு வந்த தாய்மார்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சொந்த இடம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வடக்கே மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் செய்வதறியாது அங்கும் இங்குமாக அவதிப்பட்டு நிற்கின்றனர்.
வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து ஓமந்தையூடாக வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களில் சுமார் 500 பேர் தமது இடங்களுக்குத் திரும்ப அவசரமாக அனுமதி பெற்றுத் தரும்படி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் விண்ணப்பித்திருக்கின்றனர் என்று வவுனியா செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓமந்தை ஊடான போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அனுமதிக்குமாறு வவுனியா அரச அதிபர் படை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியும் என்று படைத்தரப்பு தெரிவித்து விட்டதாகவும் வவுனியா செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாகப் புலிகளின் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
அரச அலுவலர்கள் தமது உத்தியோக அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் படையினரிடம் காண்பித்து தம்மை உறுதிப்படுத்திய பின்னர் சாவடியூடாக வன்னிப் பகுதிக்குள் செல்லமுடியும் என்று மாவட்ட அரச அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
எனினும் புலிகள் பகுதிக்குள்ளிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இப்போதைக்கு கண்டி வீதியை திறப்பதற்கும் ஊரடங்கை முற்றாக நீக்குவதற்கும் படையினர் கடைசிவரை சம்மதிக்க மாட்டார்கள். அப்படி செய்தால் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுவர். அதன் பிறகு குடாநாட்டை கைப்பற்றுவது புலிகளுக்கு சுலபமாகிவிடும் என்ற அச்சம் படையினருக்கு உள்ளுர உண்டு.
ஐந்து லட்சம் மக்களும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கிடுக்குப்பிடியில் நாளாந்தம் செத்து-செத்து வாழ்வதுதான் விதி என்று அங்குள்ள மக்கள் தொலைபேசியில் கண்ணீர் மல்குகின்றனர்.
நன்றி>புதினம்

படம்காட்டியது சிறீலங்கா: நிராகாரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 18, 2006

சிறிலங்கா அரசாங்கத்தின் முல்லைத்தீவு வீடியோப் படம்: கண்காணிப்புக் குழுத் தலைவர் நிராகரிப்பு

முல்லைத்தீவில் விமானக் குண்டு வீசப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்த வீடியோ படக் காட்சிகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவின் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறுவதைப் போல் நாங்கள் தவறான இடத்தைச் சென்று பார்வையிடவில்லை. இது தொடர்பாக எமக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை அரசாங்கத்துக்கும் நாம் அனுப்பி வைத்துள்ளோம். குறைந்தபட்சம் 12 குண்டுகள் அங்கே வீசப்பட்டுள்ளன. வெடிக்காத குண்டு ஒன்றை எமது கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய குண்டுகளை சிறிலங்கா விமானப்படையினர்தான் பயன்படுத்துகின்றனர்.
விமானக் குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்தில் அரசாங்கம் கூறுவதைப் போல் எந்த ஒரு ஆயுத பயிற்சி முகாமும் இருக்கவில்லை. ஆயுதப் பயிற்சி முகாம் இருந்ததாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருக்கும் வீடியோ படத்தில் கூட அவர்கள் கூறுவதற்கான போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்றார் ஹென்றிக்சன்.
ஆனால் வழக்கம் போல் இதனை சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அங்கே ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டதாக தொடர்ந்து பொய் கூறி வருகிறார்.
நன்றி>புதினம்.