ஆகஸ்ட் 17th, 2006- ‍க்கானத் தொகுப்பு

தமிழின துரோகிகளை இனம்கானுவது எப்படி?

ஆகஸ்ட் 17, 2006

தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களை இனம் கானுவது எப்படி எனபதை உலகத்தமிழர் அறிந்துகொள்வதற்காக வரயப்படும் வரைவு இது.

ஈழத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், பலர் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். குறிப்பாக புலிகளுக்கு எதிராக பேசுகிறார்கள் எழுதிகிறார்கள். ஆனால் எதிர்ப்பவர்கள் எலோரும் சொல்லும் கருத்து, மக்கள் கொலைகள் செய்யப்படுவதை கண்டிக்கிறார்கள், அல்லது கண்டிப்பது போல் நடிக்கிறார்கள். இதனால் பல உலகத்தமிழர்கள் கருத்து மயக்கம்கொள்கிறார்கள். அவர்களது தீர்மானதிற்காக இது விடப்படுகிறது.

முல்லைத்தீவு செஞ்சோலையில் நடைபெற்ற சிங்களரானுவத்தின், விமானகுண்டுவீச்சுக்கு பலியான மாணவிகள், UNHCR, போர்நிறுத்த கண்கானிப்பு குழுவினர் சென்று, கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டபின்னரும், அந்த இறந்து போன அப்பாவி மாணவர்களை வைத்து இவர்கள் செய்யும் அரசியலும், செய்தி மயக்கத்தையும் நீங்களே பிரித்து அறிந்து கொள்ளலாம்.

ஒளிவடிவில் பார்க்க இங்கே செல்லவும்.
http://www.eelatamil.com/sensolai/

புகைப்படங்களாக பார்க்க இங்கே செல்லவும்.
http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=8&Itemid=1
http://www.eelampage.com/?cn=28175
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என UNHCR, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர்நிரூபித்த நிருபனங்கள்.
http://www.eelampage.com/?cn=28187
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19228
http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=28&Itemid=1

இச்சம்பவங்களை தமிழர் என கூறிக்கொண்டு அவ் அப்பாவிமாணவர்களை வைத்து செய்திரிப்பவர்களின் திரிபுகளும், பொதுமக்களுக்காக தற்காப்பு பயிற்ச்சி கொடுக்கப்பட்ட புகப்படங்களை, இறந்த மாணவர்களின் படங்களுடன் கலந்து, அவர்கள் ராணுவ பயிற்சிக்குதான் வந்தார்கள் என நிறுவ முயற்சிக்கப்படும் முயற்சி.

திரிபுகளைபார்க்க இங்கே செல்லவும்
தேனீ
http://www.thenee.com/html/mullai-17.html
இலக்கு
http://ilakku.com/?p=549
விழிப்பு
http://vizhippu.net/node/4290
அதிரடி
http://athirady.com/?p=1852
நிதர்சனம்.நெற்
http://nitharsanam.net/?p=1354
நெருப்பு
http://www.neruppu.com/
http://www.hindu.com/2006/08/16/stories/2006081613520100.htm

இவர்கள், ராணுவ பயிற்சிக்கு என வலுகட்டாயமாக கொண்டுவரப்பட்டதாக கூறியவர்களுக்காக இன்று தமிழ்நாட்டு சட்டசபையில், இரங்கலும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

கண்டனத்தை பார்க்க இங்கே செல்லவும்
http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

இந்தியாவால் தடை செய்யப்பட்ட அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு, தமிழ்நாட்டு சட்டசபையில் இரங்கலும்,கண்டனமும் செய்யமுடியுமா? மத்திய அரசின் நிலைதான் எனது நிலை என கூறும் தமிழக முதல்வர் இதை அனுமதிப்பாரா? அல்லது இந்திய சட்டம்தான் இதை அனுமதிக்குமா?

எட்டபனும், காக்கைவன்னியனும் தமிழர்கள்தான், ஆனால் அவர்கள் இனம்கானப்பட்டார்கள்.
எனவே வாசகர்களே, தமிழினத்தின் துரோகிகள் யாரென்று இனம்கானுவதை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

விவரமான தகவலுக்கு>http://www.eelabarathi.com/1.html

கொழும்பில் மொட்டைகளின் சண்டை.

ஆகஸ்ட் 17, 2006



கொழும்பில் இன்று நடந்த அமைதிப் பேரணியில் பௌத்த பிக்குகள் பாரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.
தேசிய போருக்கான எதிர்ப்பு முன்னணியினர் இன்று வியாழக்கிழமை மாலை விகாரமாதேவி பூங்கா அருகே அமைதிப் பேரணி நடத்தினர்.
அப்போது அந்த இடத்துக்கு பதாகைகளுடன் வந்த தேசிய பிக்கு முன்னணியினர், கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பிரசங்கம் நிகழ்த்துமாறு தேசியப் போருக்கு எதிரான முன்னணியினரிடம் வாதிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து போருக்கான முன்னணியினரின் மேடையில் ஏறிய பிக்கு முன்னணியினர் முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அப்போது மேடையில் இருந்தனர். போருக்கு எதிரான முன்னணியினருக்கும் பிக்கு முன்னணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பிக்குகளின் அங்கிகள் பறந்து கீழே விழுந்தன.

மேடையிலிருந்து பிக்கு முன்னணியினர் பலவந்தமாக தள்ளிவிடப்பட்டனர். “அவர்கள் போருக்குப் போக வேண்டும் என்று வலியுறுத்துகிறனர். நாங்கள் போருக்கு அப்பால் உள்ள சந்தர்ப்பம் குறித்து பேசுகிறோம். அவர்கள் பாரிய யுத்தத்தை விரும்புகிறார்கள். நாங்கள் சில நிமிடங்களில் தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார் தேசிய போருக்கு எதிரான முன்னணியைச் சேர்ந்த பௌத்த பிக்கு மதம்பவெ அஸ்ஸகி.
அதன் பின்னர் பேரணி அமைதியாக நடைபெற்றது. ஜாதிக ஹெல உறுமயவின் பிக்குகள் பிரிவாக தேசிய பிக்கு முன்னணி செயற்பட்டு வருகிறது.

படங்கள்: அசோசியட்டற் பிறஸ்
நன்றி>புதினம்.

படுகொலைக்கு சமாதானம் சொல்வது சண்டாளத்தனம்,-கருனாநிதி.

ஆகஸ்ட் 17, 2006

இனவெறி மற்றும் இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து கலைஞர் மு. கருணாநிதி கூறியுள்ளதாவது:
கேள்வி: இனவெறி- இதயமற்றோர் நடத்திய கொடுமை இவற்றுக்கு உதாரணமாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி எது?
பதில்: அண்மையில் என்ன, மிக அருகில் நடந்த நிகழ்ச்சியே உள்ளதே! இலங்கையில் குழந்தைகள் காப்பகத்தின் மீது இராணுவ விமானங்கள் குண்டுகள் பொழிந்து தாக்குதல் நடத்தியதும், அந்த நாச காரியத்தையும் நடத்திவிட்டு, அதற்கு சமாதானமும் சொல்வது போன்ற சண்டாளத்தனமும்தான் அந்த நிகழ்ச்சி என்றார் கருணாநிதி.
நன்றி>புதினம்.

முல்லைத்தீவு படுகொலை: தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம்.

ஆகஸ்ட் 17, 2006

நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான – மனிதாபிமானம் – சிறிதுமற்ற – கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார்.
தீர்மான விவரம்:
14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது குறித்தும் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தது குறித்தும் இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணா துயரமும் கொள்கிறது.
மனிதநேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்க முடியாத இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொடுமை நிறைந்த இலங்கை இராணுவத்தின் இச்செயலை இப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
நிலையான வாழ்க்கை முறைகளுக்கும் நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை வாழ் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் இந்தப் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.
இலங்கை இராணுவத்தின் இக்கொடிய கொலைவெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த இந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்றி தங்களது அகவணக்கத்தைச் செலுத்தினர்.
நன்றி>புதினம்.