திருகோணமலையில் மாவிலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கந்தையிலிருந்து மாவிலாறு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்ட தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் இன்று காலை முதல் இரண்டு முறை பாரிய தாக்குதல் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினருக்குத் துணையாக சிறிலங்கா விமானப்படை விமானங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேநேரம் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இந்த நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டன.
இந்த முறியடிப்பு நடவடிக்கைகளின் போதே இரு போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
Friday, 28 Jul 2006 USA