பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழ்மக்களல் மீதான படுகொலைகளை கண்டித்து பிரான்சில் நடாத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் 12-07-2006 புதன்கிழமை 24வது நாளாக காலை 10:00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலின் பின் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
ஜரோப்பியத் தலைமைக்கும், தாயகத்தில் எமது மக்களின் இன்றைய சூழ்நிலை பற்றியதுமான அஞ்சல் அட்டைகள் தமிழ் இளையோர் அமைப்பினரால் மக்களின் கையெழுத்து பெறப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றது. இதில் அஞ்சல் அட்டைகளை பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டவர்களும் பணம் கொடுத்துப் பெற்று நிரப்பிக் கொடுத்திருந்தனர்.
மாலை சரியாக 18:00 மணிக்கு குளிர்பாணம் வழங்கப்பட்டு கவனயீர்ப்பு உண்ணாவிரதம் இன்றைய நாள் நிறைவு பெற்றது இன்றைய நாளிலும் 90மேலான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


