ஜூலை 4th, 2006- க்கானத் தொகுப்பு
சிவகாசி வீரனுக்கு எமது வீர வணக்கங்கள்.
ஜூலை 4, 2006சாவதற்காகப் போட்டி போடுபவர்கள்.
ஜூலை 4, 2006கட்டில் சட்டத்தில் தலையை மோதி உயிரைத் துறந்த கரும்புலி வீரன்!
*எதிர்வரும் 5 ஆம் திகதி கரும்புலிகள் தினம் மட்டக்களப்புமாவட்டத்தில் ஒரு படகிலிருந்து 28.06.1997அன்று கடற்புலிகளின் இரண்டு நடுத்தர விநியோகப் படகுகளும் அதற்குத் துணையாக ஒரு கரும்புலிப்படகும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கடற்படைத்தளம் நோக்கிப் புறப்படுகின்றது. மெல்ல இருள் பரவத் தொடங்கும் அந்த நேரத்தில் குறித்த படகுகள் திருகோணமலைப் பகுதியின் பிரதான துறைமுகப்பகுதியை கடந்து செல்கையில் ஷ்ரீலங்கா கடற்படையால் வழிமறிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அச்சந்தர்ப்பத்தில் முக்கிய விநியோகம் நிமித்தம் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளில் ஒன்று மற்றைய படகில் தவறுதலாக இடிபடுகின்றது. அதில் ஒரு படகில் சேதமடையவே பணியில் ஈடுபடும் போராளிகளால் சேதமடைந்த படகிலிருந்த முக்கிய பொருட்களும் விரைவாக மற்றைய படகில் ஏற்றப்பட்டு ஒருபடகு விரைந்து பயணத்தைத் தொடர்கின்றது. இப்போது சேதமடைந்த படகானது கரும்புலிப் படகு மூலம் கட்டி இழுக்கப்பட்டு பயணித்துக்கொண்டிருக்கும்போது சேதமடைந்த படகில் கடல் நீர் உட்புகுவது அவதானிக்கப்படுகின்றது. அந்த நீரை வெளியகற்றும் பணியில் ஒரு போராளியும் ஒரு கரும்புலியும் விரைந்து செயற்படுகின்றனர். படகுகள் இப்பொது கும்புறுப்பிட்டிப் பகுதியை அண்டிய கடற்பகுதியில் செல்கின்றன. அந்த வேளைதான் கடற்படையினரின் தொடர்ந்த தாக்குதலினால் சேதமடைந்த விநியோகப்படகு இழுவைக்கயிறு அறுபட்டு தனிமை அடைகின்றது. மிகுந்த நெருக்கடிமிக்க சூழலில் குறித்த படகிலிருந்த கரும்புலி வீரன் கடலில் குதித்து கரை நோக்கி நீந்துகின்றான். கரையை அடைந்த அவன் தேசத்துரோகிகளின் காட்டிக்கொடுப்பால் கடற்படையினரிடம் பிடிபடவேண்டி ஏற்படுகின்றது. கடற்படையினர் அந்த கரும்புலி வீரனை கைகளுக்கு விலங்கிட்டு கூட்டிச் செல்கின்றனர். இயக்கத்தின் பல்வேறு முக்கிய இரகசியமான விடயங்களை அறிந்த அந்தக்கரும்புலி வீரனுக்குத் தெரியும் எப்படியும் அந்த இரகசியங்களை இராணுவம் பெற்றுக்கொள்வதற்காக தன்னை சொல்லொணா துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் என்று அப்போதைய கணத்தில் அவனுக்கு தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய எதுவித வசதியும் கைவசம் இல்லை. அப்போதுதான் தனது நாக்கு இருந்தால்தானே இவர்கள் என்னை பேசச் செய்து இரகசியத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார்கள் என உணர்ந்து தனது நாவினை பற்களால் கடித்து துண்டாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றான். அதிக இரத்தப்போக்கு ஏற்படவே அந்த வீரன் மயக்கமடைகின்றான். அதைத் தொடர்ந்து படையினர் திருகோணமலை வைத்தியசாலையில் அவனை அனுமதிக்கின்றனர். இராணுவப் பாதுகாப்பும் அத்தோடு கட்டிலில் கூட விலங்கிட்ட நிலையிலும் அந்த வீரன் மயக்கநிலையில் கிடக்கின்றான.
இப்பொழுது மயக்கம் தெளிந்து விட்டது. தான் படையினர் வசம் உள்ளேன் என்பதும் தப்பித்துக்கொள்வது கடினம் என்றும் அவனால் உணரப்படுகின்றது. அப்போதுதான் அவன் புலிகள் அமைப்பின் மீதும் தலைவர் மீதும் கொண்ட பற்றுறுதிக்குச் சான்றாக படுத்திருந்த கட்டில்சட்டத்திலேயே பலமாக தனது தலையை மோதிமோதியே தனது உயிரைப்போக்கிவிடுகின்றான். இது கதையல்ல. கண்முன் நடந்த கரும்புலி ஒருவனின் நிஜகாவியம். அந்தக் கரும்புலி வீரன் யார் தெரியுமா? அம்பாறையில் பிறந்து இனவாதப்படையினரின் இரக்கமற்ற செயலுக்கு தன் குடும்பத்தையே பறிகொடுத்து விட்டு பின்பு புலிகளுடன் இணைந்து கருப்புலியாக மாறிய கடற்கரும்புலி மேஜர் பாலன். அவனது இயற்பெயர் சோமசுந்தரம் திலீபன்.
ஒரு கரும்புலி வீரனின் உறுதிக்கும் வீரத்திற்கும் ஒப்பிடமுடியாத இனப்பற்றிற்கும் இதைவிட சான்றுவேண்டுமா? கரும்புலிகள் என்றால் அதன் அர்த்தந்தான் என்ன? தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகின்றார் கரும்புலிகள் என்ற பதத்தில் கருமையை உறுதிக்கும் மனோதிடத்திற்குமே குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்தம் பரிமாணத்தில் அது இருளையும் குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியமான செயற்பாட்டையும். தன்மையையும் அது குறித்து நிற்கின்றது. எனவே கரும்புலிகள் என்ற பதம் பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகின்றார்.
கரும்புலிகள் ஒவ்வொருவருக்கும் பின்னால் மாபெரும் கதைகள் உண்டு. அவர்கள் தங்கள் உடலை வெடிக்கவைத்து உயிரை ஆயுதமாக பயன்படுத்தி இறக்கின்றார்கள். அந்தக் காரியத்தை தாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். தனது சாவு மூலம் தனது இந்த உயரிய அர்ப்பணிப்பு மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஏதாவது ஒரு உயர்வு கிட்டிவிடுகின்றது என்பதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி கொள்கின்றார்கள்.
ஒருதடவை ஒரு கரும்புலி வீரன் கூறினான். நாங்கள் சிறிய வயதில் வீட்டில் இருக்கும் போது அம்மா அப்பாவுடன் அடம்பிடித்து எமக்குப்பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை வாங்குவோம் அந்தப் பொருட்கள் எமக்குக் கிடைத்துவிட்டால் அந்த வயதில் அதைப்போல மகிழ்ச்சி வேறு எமக்குக் கிடையாது. இப்போது நாங்கள் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் தலைவருக்குப் பல தடவைகள் கடிதம் எழுதி கரும்புலியாகும் சந்தர்ப்பத்தை வாங்கியுள்ளோம். இப்போது இதைவிட மகிழ்ச்சி இல்லை என்று. தான் சாகப்போகிறேன் என்று தெரிந்தும் சாவு தனது கண்ணெதிரே நிற்கிறது எனத்தெரிந்தும் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த உணர்வின் உச்சங்களுடன் உலகில் எதைத்தான் ஒப்பிட முடியும் சாவதற்கு போட்டிபோடும் யாரையாவது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல கரும்புலிகள் மட்டுமே. பல சந்தர்ப்பங்களில் புலிகளால் எதிரிகளின் இலக்குகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை துவம்சம் செய்வதற்கு தீர்மானிக்கப்படுகையில் கரும்புலிகள் நான் முந்தி நீ முந்தி என போட்டிபோடுவதுதான் அதிகம். அதனால் சீட்டுக் குலுக்கிப்போட்டு உரிய ஒரு கரும்புலியை தேர்வு செய்யும் முறையும் புலிகளிடம் உண்டு. தலைவர் பிரபாகரன் அவர்கள் இப்படிக்கூறுகிறார் மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள் என்று கூறுகின்றார்.
அண்மையில் அல்லைப்பிட்டியில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் கூட துப்பாக்கிகளால் இரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தமை உலகமே அறிந்ததுதான். இது போல தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்ட காட்சிகளை இன்று கரும்புலிகளாக மாறியவர்கள் நேராகக் கண்டவர்கள்தான். இப்டியான சம்பவங்கள் அவர்களின் ஆழ்மனங்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் கூட அவர்கள் இந்த அவலங்களை இல்லாமல் செய்வதற்கு கரும்புலியாக மாற தூண்டுதலாக இருந்தது என்றால் கூட மறுப்பதற்கு இல்லை.
ெபாதுவாக இன்று சர்வதேச சமூகம் தற்கொலைத் தாக்குதல்களை வெறுக்கின்றது. கார்க்குண்டு வெடிப்புகளும் பிற முறைகளிலான தற்கொலைத் தாக்குதல்களும் உலகில் பல இடங்களில் பரவலாக இடம் பெறுகின்றது. உலகத்தின் பார்வையில் இந்தத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் அதிகமாகக் கொல்லப்படுவது உணரப்படுகின்றது. இது தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டிய விடயம். என்றாலும் சர்வதேசம் வெளியிடும் கருத்தில் உண்மையில்லை என்றும் கூறிவிட முடியாது. ஆனால் இந்தக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது புலிகளின் கரும்புலிகள் அணி. புலிகளைத் தங்களின் நலன்களை மையமாக வைத்து உலகின் பல நாடுகள் தடைசெய்திருந்தாலும் உள்ளார்ந்த ரீதியாக இந்நாடுகள் புலிகளின் வீரம், ஒழுக்கம், இனப்பற்று, தந்திரோபாயம் என்பவற்றை மெச்சத் தவறவில்லை. அந்த வகையில்தான் கரும்புலிகள் அணியின் ஒழுக்கத்தையும் வீரத்தையும் உலகம் மதிப்பிடுகின்றது. தான் தெரிவு செய்த இலக்கைத்தவிர வேறு எதற்கும் தேவையற்ற இழப்புக்கள் சேதங்கள் வந்துவிடக் கூடாது என்பதில் கரும்புலிகள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதற்காகக்கூட பல சந்தர்ப்பங்களில் அவர்கள் திட்டங்களை மாற்றியதோடு தாங்களே இழப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சமயம் கடற்படைப் படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தச்சென்ற கரும்புலி வீரன் மீன்பிடித்துக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை குறித்த கடற்படைப்படகில் பிடித்து துப்பாக்கி முனையில் வைத்திருந்ததைக் கண்டதும் கடற்படைப்படகு மீது தாக்குதல் நடத்தாமல் தனியே தனது வெடி மருந்துப்படகை வெடிக்கவைத்து வீரச்சாவடைகின்றார். அன்று கடற்படைப் படகு மீது தாக்குதல் நடந்திருந்தால் கடற்படையோடு சேர்ந்து அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பார்கள். இதுதான் கரும்புலிகள் கட்டிக்காக்கும் அதியுயர் ஒழுக்கம். சாகப்போகும் இறுதிக்கணத்திலும் கரும்புலிகள் எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை வெறும்
தற்கொலைத் தாக்குதலாளர்களாக பார்க்காமல் அதியுயர்ந்த ஒப்பற்ற பிறவிகளாக பார்க்க வேண்டிய நிலை யாவருக்கும் ஏற்படுகின்றது.
கடற்கரும்புலி மேஜர் குமரவேல் அவர்களே இவ்வாறு வீரச்சாவடைந்தவர்.
புதுவை இரத்தினதுரை எழுதிய இந்தப்பாடல் வரிகளைப்பாருங்கள்.
முகம் தெரியாது – உங்கள் முகவரி தெரியாது இடமும் தெரியாது – உங்கள் படமும் கிடையாது மகனா மகளா அயலா உறவா எதுவும் தெரியாது எனினும் நீங்கள் எமக்காய்த் தானே வெடித்தீரென்பது தெரியும்.
யாரென்று எங்களால் அறிய முடியாமலிருக்கும் அந்த மறைமுக வீரர்களின் மனதைப் போல இந்த உலகில் யாருக்குத்தான் மனது இருக்கும். சாதனைகளை தமதாக்கி பேரெடுக்க விரும்பும் பேர்வழிகள் இந்த உலகில் எத்தனை எத்தனை. ஆனால் மாபெரும் சாதனைகளைப்புரிந்து உயிரையும் உவந்தளித்து யாரோ ஒரு சிலரால் மட்டும் உணரப்படும் உண்மைகளாக வாழும் இந்த பேர் தெரியாத கரும்புலிகள் செய்த சாதனைகளைப்போல் வேறு எந்த சாதனைகளை காண முடியும். வெடி குண்டு சுமந்து உடல் வெடித்த சத்தத்தையும் அந்த செய்தியையும்தானே அறியலாம். அவர் யார் எவர் என்று தெரியாது. அவர்களுக்குத்தானே நினைவுக்கற்களோ கல்லறைகளோ கட்டமுடியாதே. தமிழர் நெஞ்சில் அவர்கள் வாழ்வார்கள். அவர்களைப்பற்றி பொதுவாக பேச முடியுமே தவிர தனியான வரலாறு சிலருக்குத்தானே தெரியும். நெருப்பாறுகளுக்குள் அவர்கள் நீந்தியதும் நிலத்துக்குள் புதைந்து கிடந்ததும் இந்த விடுதலைக்கு என்பதை மறவாமல் இருப்போம்.
தமிழரின் விடுதலைப்போராட்டம் இன்று சர்வதேச ரீதியாகப் பேசப்படுவதற்கு உயிர்களைக் கொடுத்து உறங்கிக்கொண்டிருக்கும். கரும்புலிகள் மிக முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்கள் என்பது உண்மையே. கட்டுநாயக்கா விமானப்படைத்தள தாக்குதலைத் தொடர்ந்து ஷ்ரீலங்கா அரசு சந்தித்த மிகப்பாரிய பொருளாதார நெருக்கடியும் புலிகளை தாம் வெல்ல முடியாது என திடமாக நம்பியமையும் தான் பேச்சுக்கு செல்லத்தூண்டியது என ஒரு தடவை முன்னாள் ஷ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அத்தோடு சர்வதேச அழுத்தமும் ஒரு காரணம் என அவர் கூறியது எந்தளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பது கேள்விக்குறியே. இந்த மாபெரும் மாற்றங்களை செய்தது கரும்புலிகள் அன்றி வேறு யார்? இலங்கை சுதந்திரம் அடைந்தது என சொல்லப்படும் காலப்பகுதியிலிருந்து பார்த்தால் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலின் பின்பே இலங்கையின் மிகப்பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளால் எங்கும் எப்போதும் ஷ்ரீலங்காவில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை கரும்புலிகள் உணர்த்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் பணத்தையல்ல உயிர்களைக் கொடுத்தே நிரூபித்திருக்கிறார்கள். பலாலி விமானத்தளம் மீதான கரும்புலிகளின் தாக்குதல் இதற்கு நல்ல சான்று. அது போலவே 12.04.1996 அன்று கொழும்பு துறைமுகப்பகுதியில் ஊடுருவி கடற்படைக் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஒன்பது கரும்புலிகள் வீரச் சாவடைந்தமையையும் குறிப்பிடலாம்.
கரும்புலிகளைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயிர்ப்பூ எனும் தமிழீழத் திரைப்படம் கரும்புலி ஏன் எப்படி உருவாகின்றான் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அந்தத் திரைப்படத்தில் அந்த மீனவக்குடும்பத்தில் வாழும் நகுலன் தொழிலுக்குச் செல்லும் வேளை ஒரு தடவை கடற்படையினர் மேற் கொள்ளும் தாக்குதலில் தனது தம்பி தன் கண் முன்னே கொல்லப்படுகின்ற காட்சியைக் காண்கின்றான். மீன்பிடிப்படகில் நின்றும் கைகளை உயர்த்தி சுடாதையுங்கோ சுடாதையுங்கோஎன தனது தம்பி கதறிய காட்சி அவனது மனதில் ஏற்படுத்திய செய்திகள் பல.
நன்றி>thinakkural.com
ராஜீவ்காந்தி பிரபாகரனுக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்?
ஜூலை 4, 2006தினபூமி பொய் சொல்கிறதா??
-ஈழபாரதி-
பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து திடுக்கிடும் தகவல் தினபூமி நாளேடு தெரிவிப்பு
இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசு அமையவும் விடுதலை புலிகளின் நிதித்தேவைகளுக்காக மாதாந்தம் 50 லட்சம் ரூபா வழங்குவதெனவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்ததாக தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளேடான “தினபூமி’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளதாக சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி அலைவரிசை நேற்று முன்தினம் இரவு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் “தினபூமி’ நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளின் விடயத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ்காந்தியை கொன்றதே நாங்கள் தான் என விடுதலைப் புலிகள் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு பகிரங்கமாக தெரிவித்தது. இக்கொலையை மன்னித்து இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புவதாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
பாலசிங்கத்தின் இந்த பேட்டி மிகுந்த சர்ச்சையைத் ஏற்படுத்தியதையடுத்து விடுதலைப் புலிகளை மன்னிக்கமாட்டோம் அவர்களுக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திடீரென ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லையென்று புலிகள் மறுத்தனர். பாலசிங்கத்தின் பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக புலிகள் விளக்கமளித்தனர். நடந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர பொறுப்பேற்கவில்லை என புலிகளின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்தார்.
இந்நிலையிலேயே ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையே இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்ததாக சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து அந்த தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் அந்த சேனல் மேலும் விளக்கமளித்துள்ளதாக “தினபூமி’ நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசாங்கம் அமைய ராஜீவ்காந்தி புலிகளுக்கு உறுதியளித்திருந்தார். இதற்காக இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் இலங்கை அரசின் தலையீடு இருக்கவே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிதிக்காக ராஜீவ்காந்தி மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
80 களின் இறுதியில் இலங்கையில் வடமராட்சி பகுதியில் சிங்கள இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்களையும் நிவாரணப்பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார். உணவு பொட்டலங்களை போடுவதற்காக இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ்காந்தி முன்வந்தார். அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார். தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசு அமைய அவர் ஏற்பாடு செய்ததாக பாலசிங்கத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனையோ அரசியல் கொலைகளை புலிகள் செய்திருந்தாலும், ராஜீவ்காந்தி படுகொலை புலிகள் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாக பாலசிங்கம் மிகவும் வேதனையுடன் தமது சுயசரிøதயில் மனம் விட்டு எழுதியிருப்பதாக மேற்படி தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. பாலசிங்கத்தின் இந்த பகீர் தகவல்கள் இந்தியாவில் புதிய புயலை கிளப்பும் என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி>லங்காசிறீ
இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழுஆதரவு.
ஜூலை 4, 2006இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழு ஆதரவு – சியாம் சரண்
தொடரும் வன்முறைச் சூழலுக்கு முடிவு கட்டி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண சிறீலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது.
நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் தொடருந்தும் வன்முறைகளால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்வது தமிழ் அரசியல் மட்டங்களிலிருந்து மத்திய அரசுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதாக சுட்டுக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இன நெருக்கடிகளுக்கு அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் எனினும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் வெளிநாடுகளும் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் வலியுறுதியுள்ளார்.
சந்திப்பின் நிறைவாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கினுடைய சிறப்புச் செய்தி ஒன்றை கையளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் இந்தியாவின் இணைப்பாட்சித் திட்டத்தை ஒத்த தீர்வை இலங்கை அரசு முன்மொழிந்தால் அதற்கு இந்திய அரசாங்கம் கொள்கை அளவிலான ஆதரவை வழங்கும் என உறுதியளித்திருக்கின்றார்.
நன்றி>புதினம்.



