ஜூன் 29th, 2006- ‍க்கானத் தொகுப்பு

றோவின் திட்டம் வெற்றிபெறுமா ?

ஜூன் 29, 2006

கடந்த இரண்டு நாட்களாக, கலாநிதி பாலசிங்கம் அவர்கள் மறைந்த இந்தியப் பிரதமர் குறித்து இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பலத்த சர்ச்சைகளை இந்திய – இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிகளினால் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் ராஜீவ் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களையே மீண்டும் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் இந்திய ஊடகங்களினால் தமது முன்னாள் பிரதமர் குறித்து எழுப்பப்படாத கரிசனை, பாலசிங்கம் அவர்களின் புதிய பேட்டியினை அடுத்து எழுந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது.

இதற்கு மேலாக, திட்டமிட்ட முறையில் பரப்புரை செய்யப்பட்டுள்ள இந்த செய்தியின் மூலம் இந்திய உளவு நிறுவனமான றோ, தமிழ்த் தேசியத்தினை முடக்குவதற்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பதே உண்மை.

இனி றோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினை சற்று உற்று நோக்குவோம்.

கடந்த வாரம் ரெகெல்கா இணையத் தளத்தில் வெளியாகிய செய்தியான “விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் றோ புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது” என்ற செய்தி மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டமை கவனத்தில் கொள்ளப்படவேணடும்.

அடுத்து கவனிக்கப்பட வேண்டியது, இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது பெருகி வரும் ஆதரவு றோவுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு ராஜீவ் மரணத்தை மீண்டும் தூசி தட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே தான் இந்தச் செய்தி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

மேலும், ராஜீவ் காந்தியன் மனைவியின் தலைமையிலான ஆளும் கொங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை றோவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மை.

இவ்வளவு காலமும் தமது திட்டத்திற்கு அமைய இடம்பெற்ற சகல நடவடிக்கைகளும் தமது ஆளுகைக்கு அப்பால் சென்றுகொண்டிருப்பதை பொறுக்க முடியாத றோவினர் தமது நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

இதன் முதல் வடிவம்தான் என்.டி.ரீ.வியின் ஜேர்மனிய நிருபர் மூலம் பாலசிங்கம் அவர்களைப் பேட்டிகான வைத்து, திட்டமிட்ட முறையில் – இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தினை பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் றோவினர் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்பவற்றினை கணித்து தமது சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராகுகின்றனர்.

றோவின் திட்டம் என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்கு நெடுங்காலமாக தமது முயற்சிகளை மேற்கொண்டுவரும் றோ பெரும் தோல்விகளையே கண்டுவந்துள்ளது.

றோவினர் தமது கடந்த கால முயற்சிகளில், விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரராசாவினை ஈடுபடுத்தி தோல்வியடைந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பி முரளீதரனை ஈடுபடுத்தினர். இதிலும் தோல்வியையே றோவினர் சந்தித்தனர்.

எனவே இவர்களின் புதிய முயற்சியினைச் சற்று நோக்குவோம்,

• இனிவரும் காலங்களில் தமது ஊடகங்களின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவர்.

குறிப்பு: இதற்கு உறுதுணையாகச் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பத்தி எழுத்தாளர் கடந்த பல வாரங்களாக புலி ஆதரவுப் பத்திகளை எழுத ஆரம்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

• இந்தியா தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தரும். ஆனால், விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும்.

இந்தியா தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரவள்ளது ஆனால் விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைக்கலாம் என்பதே றோவின் புதிய திட்டம்.

• பாலசிங்கம் அவர்களின் பேட்டியினை தளமாக வைத்து செய்யப்படவுள்ள பரப்புரை…

தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்தான் தடையாகவுள்ளார் என்றும் மற்றவர்கள் தீர்விற்கு ஆதரவாகவுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தொனியிலான செய்திகள்.

எனவே இறுதியாக, தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விழித்துக்கொள் தமிழா! இல்லையேல் விடிவு கிடைக்காது.

உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்வரும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.

andrew.rasiah@gmail.com

நன்றி>பதிவு.

ஈழத்திற்கான அமெரிக்க நாளேட்டின் தீர்வு.

ஜூன் 29, 2006

ஈழத் தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான சூழல் மேலோங்கி வருவதாக குறிப்பிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை வரைந்திருக்கும், (Boston Globe)பொஸ்ரன் குளோப் எனப்படும் அமெரிக்க நாளேடு, சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் சிறீலங்கா
அரசாங்கத்தின் பிடியில் இருந்து, வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலை பெற்று, புதிய அரசியலமைப்பின் கீழ், தன்னாட்சியுரிமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே, இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது.
சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளின் வடுக்கள், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும், (Loose Confederation) லூஸ் கொன்பெடரேசன் எனப்படும் தளர்வான கூட்டு இணைப்பாட்சி மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பொஸ்ரன் குளோப் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வாறான ஆட்சியமைப்பு, குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தையும், வலுவான அரசியல் அதிகாரங்களையும், தனியான ஆயுதப் படைகளையும் கொண்ட மாநில அரச அமைப்பையும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

ஜூன் 29, 2006

இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் “போஸ்டன் குளோப்” ஏடு தெரிவித்துள்ளது.

போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்:

இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும்.

உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது” என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும்.

பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது.

அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது.

சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள

இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து

வடக்கு – கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும்.

தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார்.

“தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்” என்று தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும்.

இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து-

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து

செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க

நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்-

என்.டிவியின் செய்தி, ஒரு செய்தித்திரிப்பா?

ஜூன் 29, 2006

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.
“”ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம்.
பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை.
“”ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.” என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது.
“”கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.” என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க
அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் “முண்டத்தை’ மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு.
மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள்.
“”இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.” என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது.
“”இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே?” என்ற கேள்விக்கு இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அளித்த பதில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள் ளும் மூழ்கடித்தது.
முதலாவதாக
“”இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் யார்? அவர் புலி களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா என்பது எங்களுக்குத் தெரியாது.” என்று இந்தியத் தரப்பில், அதுவும் வெளிவிவ காரத்துக்குப் பொறுப்பான இணை அமைச்சர் பதவியிலிருக் கும் ஒருவர் கூறியிருப்பது வியப்புக் குரியது.
அன்ரன் பாலசிங்கம் புலிகளின் தத்துவாசிரியர். மதியுரை ஞர், பேச்சாளர். அமைதி முயற்சிகளுக்கான புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர். இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் புலிகளின் சார்பில் பல மட்டங்களில் தொடர்பு கொண்டு பங்காற்றியவர். தலைவர் பிரபாகரன் முன்பாகப் பத் திரிகையாளர்கள் திரண்டிருந்த சமயம் தலைவரையும் வைத் துக்கொண்டு “”தலைவர் பிரபாகரன் கூறினாலும் நான் கூறி னாலும் ஒன்றுதான்” எனத் தலைவரின் குரலாகப் பகிரங்கமாக ஒலித்தவர்; ஒலிப்பவர்.
அவரைப் பார்த்து “”அவர் யார்? புலிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா அவர் என்பது தெரியாது.” என இந்திய அமைச் சர் கூறுவது அவரது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில் கேலிக் கூத்தானது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் உட்பட அனைத்து ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கும், போராளிகள் அமைப்புகளுக் கும் இந்தியா தனது மண்ணில் ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்டது என்பது சர்வதேசம் அறிந்த பரகசியம்.
அந்தப் பயிற்சி வழங்கப்பட்ட காலத்திலேயே புலிகளின் மதியுரைஞ ராகவும், பேச்சாளராகவும் இருந்தவர் பாலசிங்கம். அவர் யார் என்று இப்போது கேட்கும் இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அப்போது இந்திய அரசியலிலேயே ஒரு பிரமுகராக இருந் திருப்பாரோ என்பது தெரியவில்லை.
அந்தக் கேள்வியில் கேட்கப்பட்டது போல ஈழத் தமிழ்ப் போரா ளிகளுக்குப் பயிற்சி கொடுத்துத் தூண்டிவிட்டு இலங்கைத் தீவு, இரத்தத் தீவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த மூல சக்திகளில் இந்தியாவும் ஒன்று.
அந்தப் பொறுப்பை அப்படியே பொய் என்று மறுத்திருக் கிறார் இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா.
இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களும், பயிற் சியும் வழங்கியது சரியா, தவறா என்பது வேறு விடயம்.
ஆனால், அப்படிச் செய்துவிட்டு, அதை மறந்து, இப்போது மறுத்து, “”இலங்கையில் அமைதி,ஸ்திரம், ஐக்கியம் ஆகிய வற்றையே இந்தியா விரும்புகின்றது.” என்று உருத்திராட்சப் பூனை போல இந்தியத் தரப்பு பேச முடியுமானால்
“”கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் புதிய போக் கில் நல்லுறுவு பேண ஈழத் தமிழர்களும், புலிகளும் விரும்புகின்றார்கள்” என்று புலிகளின் பிரதிநிதி கூறுவதில் தவறே தும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயமானதும் கூட.

நன்றி>உதயன்.