ஜூன் 18th, 2006- ‍க்கானத் தொகுப்பு

வரலாற்றின் வழிகாட்டுதலில் “கிளைமோர் முறியடிப்பு”

ஜூன் 18, 2006

வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன.

சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஆழ ஊடுருவும் படையைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினரது பகுதியில் தாக்குதலை நடத்துவது என்பது அமெரிக்காவின் தோற்றுப்போன ஒரு உத்தியாகும்.

வியட்நாம் போராளிகள் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் சமரசப் பேச்சுக்கள் இழுபறிப்பட்டு அமெரிக்கப் படைகளை விரட்டியடிக்க தயாரானபோது அதனை சிதைக்க ஆழ ஊடுருவும் படையணியை போராளிகளின் பகுதிகளுக்குள் தரை வழியிலும் இரகசியமாக உலங்குவானூர்திகளின் மூலமாகவும் கொண்டு சென்று ஊடுருவ விட்டு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் கடைசியில் அமெரிக்கப் படைகள் அவலப்பட்டே தப்பியோடின.

அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமில் வியட்கொங் போராளிகள் போராட்டம் நடத்தினர்.

போராளிகளின் கெரில்லா உத்திகள் அமெரிக்கப் படைகளை ஆட்டுவித்தன.

1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் கடைசியில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை சிதைக்க நர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்ஸ் தலைநகரில் பேச்சுக்கள் நடந்தன. பேச்சுக்கள் இழுபறிப்பட்டன.

பேச்சு-மோதல், பேச்சு-மோதல் என்று நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில் பேச்சுக்களில் நம்பிக்கை இழந்த போராளிகள் போருக்குத் தயாராகினர். அமெரிக்கப் படைகளுக்கு எதிராக டெட் வலிந்த தாக்குதல் என்ற நடவடிக்கையை போராளிகள் தொடங்கினர்.

1968 ஆம் ஆண்டில் தொடங்கிய டெட் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது.

இதற்கிடையில் 1964 ஆம் ஆண்டில் காட்டுப்போர் முறையாக ஆழ ஊடுருவும் படையணி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

6 பேர் கொண்ட பட்டாலியன், 12 பேர் கொண்ட பிரிக்கேட் என்று பெரும் படையணிகளுக்கு இணையான 6 பேர், 12 பேர் கொண்ட இராணுவத்தினர் என்று அவை உருவாக்கப்பட்டன.

டெட் நடவடிக்கை காலத்தில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும் கட்டம், கட்டமாக டெட் தொடர்ந்தது. டெட் நடவடிக்கையில் இறுதிக் கட்டமாக அமெரிக்கப் படைகளை விரட்ட தயார்படுத்தல்களை போராளிகள் மேற்கொண்டனர். அதனை முறியடிக்க ஆழ ஊடுருவும் படைப்பிரிவு களம் இறக்கப்பட்டது.

பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலான போராளிகளின் நிலைகளையும் அவர்களின் உயர்மட்டத் தளபதிகளையும் அழிக்க உலங்குவானூர்திகளில் இரகசியமான முறையில் காடுகளுக்குள் இந்த அணிகள் இறக்கி விடப்பட்டன. இதில் அமெரிக்கர்களும் வியட்நாமிய துணை இராணுவக் குழுவினரும் இருந்தனர். அத்துடன் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த வியட்நாமியர்களை மக்களுக்குள் ஊடுருவ விட்டனர். அவர்கள் மக்களோடு மக்களாக விவசாயக் கூலிகளாவும், தொழிலாளர்களாவும் ஊடுருவினர்.

மக்களிடம் பேசி போராளிகளின் நிலைகள் பற்றி அறிய இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களைப் பொறுத்த வரை தமக்குத் தெரிந்ததை தன் சகோதரனுக்கோ, பிள்ளைகளுக்கோ கூட சொல்லாத இரகசியம் காத்தலின் மூலம் அங்கு போராளிகள் பற்றிய தகவல் ஆழ ஊடுருவும் அணிக்கு அந்த வகையில் கிடைக்கவில்லை.

அமெரிக்க ஹொலிவூட் படங்களில் வருவது போல இந்த ஆழ ஊடுருவும் அணியினரால் பெரிய அழிவைப் போராளிளுக்கு ஏற்படுத்த முடியவில்லை.

பல, பல அணிகளாக அமெரி;க்காவின் ஆழ ஊடுருவும் அணிகள் வியட்நாம் போராளிகளின் பகுதிளுக்குள் தீவிரமாக ஊடுருவ விடப்பட்டன.

துணை இராணுவக் குழு, வியட்நாமியர்கள் புலனாய்வுத் தகவல்களுக்கு ஊடுருவ விடப்பட்டனர்.

உலகில் இந்த அணிக்கு அமெரிக்கா பெரும் பரப்புரை செய்து வியட்நாம் மக்களை பீதியுற வைக்கும் உளவியல் போரும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் வியட்நாம் தளபதி ஜெனரல் கியாப்பின் முறியடிப்பு உத்திகள் அவர்களை கதிகலங்க வைத்தன.

காடுகளை கரைத்துக் குடித்த போரளிகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு கலக்கத்தை கொடுத்தது ஆச்சரியமான விடயம் அல்ல.

கெரில்லாப் போராளிகளுக்கு இடையில் கெரில்லாப் போர் முறையினை ஒரு மரபாக கொண்டு வந்தபோது தொடக்கத்தில் திகைத்த போராட்ட அணியினர் ஒரு குறிப்பிட்ட காலத்தை அமெரிக்க உத்திகளை பகுப்பாய்வு செய்ய செலவிட்டனர்.

இதன் பின் அவர்களின் உத்திகளை கற்றுக்கொண்டு அவர்கள் முறியடிப்பை தொடங்கினர்.

இதன் விளைவாக அமெரிக்கத் தளங்களில் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி பெரும் போர்மூலம் அமெரிக்கப் படைகளை ஓட, ஓட விரட்டின. வல்லரசுப்படைகள் ஓடின. கடைசியில் கப்பலில் இருந்த உலங்குவானூர்திகள் மற்றும் பெரும் போர்க்கலங்களை கடலில் தள்ளி விட்டு தப்பியோடியதுதான் பெரும் அவலம்.

உலக விடுதலை வரலாறில் மிப்பெரும் வரலாறறுச் சாதனை அது.

அதே அமெரிக்கச் சூத்திரத்தை சிறிலங்காப் படைகள் இங்கு மேற்கொள்கின்றன.

தமிழரின் இறுதிப்போரை சிதைக்கும் நோக்கில் அமெரிக்கப் பாணி ஆழ ஊடுருவும் அணிளை கொண்டு தீவிரமாக தாக்குகின்றனர்.

அதன் பாணியை பகுப்பாய்வு செய்யும் காலம் முடிவடைந்து முறியடிப்புக்கான காலம் நகர்கின்றது.

எதிரிகள் எதைச் செய்கின்றார்களோ அதுவே அவர்களின் அழிவுக்கு காரணமாகும் என்ற வரலாற்றின் முன்னோடியான வியட்நாம் தமிழீழ மக்களுக்கு படிப்பினையான ஒன்று.

அமெரிக்கப் படைகளைப் போல சிறிலங்காவின் யாழ்ப்பாண இராணுவத்துக்கும் மன்னார் மற்றும் மட்டக்களப்பு இராணுவத்துக்கும் அவலம் காத்திருக்கின்றது.

ஏனைய மாவட்டங்களில் காடுகள் வழி படையினர் சிங்கள தேசத்துக்கு தப்பியோடி விடுவர்.

அமெரிக்கா, வியட்நாமில் பொறியில் சிக்கியது போல இப்போது யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் படைகளும், மன்னாரில் 8 ஆயிரம் படைகளும், மட்டக்களப்பில் 10 ஆயிரம் படைகளும் இருக்கின்றன.

இவர்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுதலையை வென்றெடுக்கும் காலம் நெருங்கின்றது.

வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.

-புதினம்

சிறிலங்காவிற்கான ஐப்பான் உதவிகள் நிறுத்தப்படலாம்.

ஜூன் 18, 2006

இலங்கையில் சமாதானமுற்சிகள் தேய்வடைந்து போருக்கான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கான ஐப்பானின் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐப்பான் உதவிகள் நிறுத்தப்பட்டால் சிறி லங்காவிற்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளும் நிறுத்தப்படலாம் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மேலும் துணை இராணுவக் குழுவினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் தொடர்பில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நம்பவும் ஜப்பான் மறுத்து ட்டது.

இந்த நிலையில் வன்முறைகளும் அதிகரித்து யுத்தம் தொடங்கக் கூடிய சூழலில் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்த ஜப்பான் பரிசீலிப்பதாக ஜப்பான் தூதரக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான சுவீடன் தூதுவரும் கடந்த வாரம், அமைதி முயற்சிகளை உண்மையா ஈடுபாட்டுடன் அரசாங்கம் முன்னெடுக்காத வரை அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை இடைநிறுத்தப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.