ஜூன் 13th, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஜுன் 16-இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம் தமிழகத்தில்.

ஜூன் 13, 2006

நெடுமாறன், இராமதாசு, வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு
தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜுன் 16ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக் கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதி களாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16-ந்தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும்.

2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறு வனர் மரு.இராமதாசு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செய லாளர் தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக் கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக் கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள்.

சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள் கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள்.

கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>லங்காசிறி

தமிழர் கொலைகளின் பின்நின்று செயல்படுபவர்.

ஜூன் 13, 2006

ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவில் வடக்கு கிழக்கில் தமிழர் படுகொலை – TCHR
அதிபர் மகிந்த ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவிலேயே வடக்கு கிழக்கில் தமிழர் மீதான படுகொலைகள் நடைபெறுவதாக பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் யாவும் தமிழ் மக்களை பீதி கொள்ளும் நோக்கில் அதிபர் மகிந்த ராஜபக்சாவினாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாரான ராஜபக்சாவின் சகோதரன் கொத்பாய ராஜபக்சாவினதும் உத்தரவிலுமேயே தமிழர் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

இப்படுகொலைகளை மேற்கொள்ளும் துணை ஆயுதக்குழுக்களுக்கு சன்மானப்பட்டியல் ஒன்று தாயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சன்மானம் வழங்கப்படுவதாகவும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இவ் சன்மானப்பட்டியலில், கைக்குண்டுத் தாக்குதல் செய்வோருக்கு 15.000 ரூபாவும், கிளைமோர் தாக்குதல் செய்வோருக்கு 20.000 ரூபாவும், விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக முன்னின்று உழைப்போரை கொலை செய்வோருக்கு 100.000 ரூபாவும் சன்மானமாக வழங்கப்படுவதுடன், அரச படைகள் மன்னிப்புடன், தாம் விரும்பியவர்களை வடக்கு கிழக்கில் கொலை செய்யவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவும் ராஜபக்சா சகோதரார்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளாகவும், சிறிலங்காவில் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் சிறிலங்காவின் தென் பகுதியை சேர்ந்த ராஜபக்சா சகோதரார்ளும், அவர்களது முன்னாள் பாடசாலை தோழர்களும், நண்பர்களும், உறவினர்களுமே உள்ளார்களென்றும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நன்றி>பதிவு.

சிறுவர் படுகொலையை சர்வதேசம் கண்டிக்காதது ஏன்?

ஜூன் 13, 2006

சிறிலங்கா படைகளினால் 24 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டது, தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்­ப­தாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சாட்­டியுள்ளனர்.

சிறுவர்களை படையில் சேர்ப்பதாக இச்சர்­வதேச உரிமை அமைப்புக்கள், விடுதலைப்­புலி­கள் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி­வந்­த­ன.ஆனால் இன்றைய நிலையில், இலங்கை இனப்பிரச்சினையால் அண்மைக்காலமாக சிறு­வர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்­டிப்பதற்கு இச்சர்வதேச அமைப்புக்கள் தவ­றிவிட்டன என, விடுதலைப்புலிகள் குற்­றம் சுமத்தியுள்ளனர்.

சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்­து­­வ­தாகக் கூறிக்கொள்ளும் இச்சர்வதேச உரிமை நிறுவனங்கள், தற்போது நடை­பெறும் சிறுவர்களின் ஒவ்வொரு படு­கொலை­யின் பின்னரும் தமது கண்டனத்தை வலியுறுத்திக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌன­மாகவே இருக்கின்றனர்.

அண்மைய நாட்களில் படுகொலை செய்­யப்­பட்ட 24 சிறுவர்களின் பெயர்க­ளை­யும் புலி­கள் பட்டியல் படுத்தியுள்ளனர். இதில் அண்­மையில் மன்னார், வங்காலையில் கொடூ­ரமாக படுகொலை செய்யப்பட்டு தூக்கி­லிடப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

கடந்த மாதமும் யுனிசெவ் அமைப்பு விடு­தலைப்புலிகள் சிறுவரை படையில் சேர்ப்­பதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்­பிடத்­தக்கது.

நன்றி>புதினம்.