யாழில் டக்ளஸ் முன்னிலையில் மக்கள் சித்திரவதை
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.சிறிதர் திரையரங்கில் பகல் நேரங்களில் தங்கி நிற்கும் போது அவரது முன்னிலையில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்காளாக இத்தகைய அட்டூழியங்கள் நடைபெற்று வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவகம் மற்றும் பின்தங்கிய கிராமங்களிலிருந்து தனது முகவர்கள் மூலம் பேருந்துகளில் அழைத்து வந்து அவர்களைச் சோதனை என்ற பெயரில் பல்வேறு துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாக அங்கு தமது துன்பத்தின் நிமித்தம் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசலில் வைத்து உடற்சோதனை செய்யப்படுவதுடன் பின்னர் டக்ளஸ் மறைந்திருக்கும் வாசலுக்குச் சென்றதும் மீண்டும் சோதனை என்ற பெயரில் தலையில் அடர்த்தியாக மயிர் காணப்பட்டால் அவைகளைக் கூட கைவிட்டு கிளறிப்பார்ப்பதுடன் மயிர்களை டோப்பெனக் கூறி இழுத்துப்பார்க்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளைத் தமது வறுமையும் மற்றும் இடப்பெயர்வுகளையும் வைத்து ஈ.பி.டி.பி விளையாடி வருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
நன்றி>புதினம்


